அம்மா உணவக ஊழியர்களுக்கு ஊதிய நிலுவைத்தொகை வழங்க வேண்டும்: முன்னாள் அமைச்சர்

அம்மா உணவக ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மதுரையில் உள்ள 12 அம்மா உணவங்களில் பணிபுரியும் அம்மா உணவக பெண் ஊழியர்களுக்கு ஜூன் மாதத்திலிருந்து தற்போது வரை சம்பளம் வழங்கப்படாததால், நீண்ட வேதனையில் உள்ளதாக தகவல்கள் வருகின்றது. தீபாவளி திருநாளுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், இதுவரை சம்பளம் வழங்கப்படவில்லை என்பது அம்மா உணவக ஊழியர்களை வேதனைக்குள்ளாகியுள்ளது. உணவக தொழிலாளர்களை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே ,அந்தந்த மாதங்களிலேயே நிலுவையில்லாமல் அம்மா உணவக பணியாளர்களுக்கு சம்பளம் கிடைத்திட உத்தரவிட்டு, ஏழை எளியமக்களுக்கு அம்மா உணவகத்தின் மூலம் தொடர்ந்து உணவு வழங்கி வருவதை உறுதி செய்திட மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அனுப்பியுள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu