தீரன் சின்னமலை உருவச்சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மரியாதை

சுதந்திரப்போராட்ட வீரர் தீரன் சின்னமலை கவுண்டர் உருவச்சிலைக்கு முன்னாள் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
சுதந்திரப்போராட்ட வீரர் தீரன் சின்னமலை கவுண்டர் உருவச்சிலைக்கு முன்னாள் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் அமைந்துள்ள தீரன் சின்னமலை கவுண்டர் சிலைக்கு, அவரது பிறந்தநாளை முன்னிட்டு ,அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி, முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் ஆகியோர் தீரன் சின்னமலை கவுண்டர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில் ,கவுண்டர் சங்க தலைவர் விஜயன், செயலாளர் சேகர், பொருளாளர் ஜெயராமன், அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் ரவிச்சந்திரன், அவைத் தலைவர் பாலகிருஷ்ணன் ,மேல சின்னம்பட்டி சம்பத்,உமாபதி, கீழ சின்னம்பட்டி செந்தில் வக்கீல் ராஜ்குமார், கல்லனை சின்னபாண்டி, பாலாஜி குமார், அலங்கார பேரூராட்சி கவுன்சிலர் நாட்டாமை சுந்தர், ஒன்றிய கவுன்சிலர் ரேவதி ,|முன்னாள் கவுன்சிலர் மதலையப்பன், ராகவன் , அச்சம்பட்டி முருகன் , சக்கரை ஆலை மேட்டுபட்டி மயில்வீரன் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு தீரன்சின்னமலை கவுண்டர் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu