/* */

மதுரை அருகே கண்மாயில் குளிக்க சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

மதுரை அருகே கண்மாயில் குளிக்க சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

மதுரை அருகே கண்மாயில் குளிக்க சென்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
X

இனளஞர் உயிரிழந்த ஏரி.

மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி பெரியசாமி. இவரது கடைசி மகன் கண்ணன் (வயது 28). இன்று காலை நண்பர்களுடன் கண்மாயில், குளிக்க சென்றிருந்தார். இந்த நிலையில், கண்ணன் நண்பர்களுடன் விளையாடி நீச்சல் அடித்துக் கொண்டு ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, நீண்ட நேரம் ஆகியும் கண்ணன் வெளியில் வராததால், அதிர்ச்சியடைந்த நண்பர்கள் கண்ணன் தண்ணீரில் மூழ்கியிருக்கலாம் என அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு வந்து மதுரை பொறுப்பு நிலைய அலுவலர் தயாளக்குமார் தலைமையிலான தீயணைப்புத்துறை குழுவினருடன் இணைந்து 20-க்கும் மேற்பட்ட கிராம இளைஞர்களுடன் நீரில் மூழ்கியதாக கூறப்படும் கண்ணனை மூன்று மணி நேரமாக தேடி உடலை மீட்டனர்.

பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த, மதுரை எஸ் .எஸ். காலனி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 16 Jan 2022 8:16 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  2. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  3. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  4. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  5. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  6. ஆன்மீகம்
    மர்ம நிழல்! விஞ்ஞானம் தோற்றது எப்படி? மெய்ஞானத்தால் அறிவியல் வளர்த்த...
  7. இந்தியா
    இந்தியாவின் சூப்பர்சானிக் டர்பீடோக்கள்..! கதறும் சீனா, அலறும்...
  8. சினிமா
    பாடல்களுக்கு ராயல்டி! பணத்தாசை பிடித்தவரா இளையராஜா?
  9. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் கைது : மக்கள் என்ன சொல்றாங்க தெரியுமா..?
  10. தமிழ்நாடு
    வறட்சியின் பாதிப்பு :உயிரிழக்கும் கால்நடைகள்..!