/* */

திருப்பரங்குன்றம் அருகே சாலையோரக் கால்வாயில் மிதந்த பெண் சடலம்

திருப்பரங்குன்றம் அருகே சாலையோரம் கிடந்த சிதைந்த பெண் சடலம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

HIGHLIGHTS

திருப்பரங்குன்றம் அருகே சாலையோரக் கால்வாயில் மிதந்த பெண் சடலம்
X

பைல் படம்.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் கணபதி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் சாலையோர கழிவுநீர் கால்வாயில் சடலம் மிதப்பதாக அவனியாபுரம் போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவனியாபுரம் போலீசார் கழிவுநீர் கால்வாயில் மிதந்த சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.

இதனைத்தொடர்ந்து கால்வாயில் மிதந்தது சுமார் 50 வயதிற்கு மேற்பட்ட பெண் சடலம் என்றும், ஒரு வாரத்திற்கும் மேலாக கால்வாயில் மூழ்கியதால் முகம் அடையாளம் தெரியவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

இறந்தவர் யார்? எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்? யாரேனும் கொலை செய்தார்களா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் காணாமல் போனவர்கள் பற்றி உள்ள தகவலை விசாரித்து வருகின்றனர்.

Updated On: 28 Feb 2022 1:28 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு