மதுரை நகரில் நடைபெற்ற பல்வேறு குற்ற சம்பவங்கள் தொடர்பாக போலீஸார் விசாரணை:

மதுரை நகரில் நடந்த பல்வேறு குற்ற சம்பவங்கள் குறித்து போலீஸார் விசாரி்க்கின்றனர்.
குடிபோதையில் போக்குவரத்து போலீஸ் மீது தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டார்.
மதிச்சிய காவல் நிலையத்தில் போக்குவரத்து போக்குவரத்து போலீசாக பணியாற்றி வருகிறார், ராஜ்குமார்.இவர், அழகர்கோவில் மெயின்ரோடு சர்வேயர் காலனி சிக்னலில் பணியில் இருந்தார். அப்போது, விதிகளை வேகமாக வாகனம் ஓட்டிய ஒருவரை தடுத்து நிறுத்தி அவரை எச்சரித்தார். இதனால், ஆத்திரமடைந்த அவர், குடிபோதையில் இருந்ததால் போக்குவரத்து போலீஸ் ராஜ்குமார் சரமாரியாக தாக்கினார் .இந்த சம்பவம் குறித்து திருப்பாலை போலீசார் வழக்குப் பதிவு செய்து, போக்குவரத்து போலீஸ் ராஜ்குமாரை தாக்கிய ,அண்ணா நகர் சதாசிவநகரைச் சேர்ந்த அய்யப்பன் 53 என்பவரை கைது செய்தனர்.
திருப்பரங்குன்றத்தில் கோயிலுக்குச் சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு
திருப்புவனம் சொட்ட தட்டி ஊரைச் சேர்ந்தவர் போஸ் மனைவி சக்தி( 52.).இவர், திருப்பரங்குன்றம் கோயிலுக்கு சென்றார் .திருப்பரங்குன்றம் பெரிய ரத வீதியில் சென்ற போது ,இவர் அணிந்திருந்த நான்கு பவுன் தங்கசங்கிலியை மர்ம நபர் பறித்துச் சென்றுவிட்டனர்.இந்த சம்பவம் குறித்து, சக்தி திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்குப்பதிவு செய்து செயினை பறித்த ஆசாமியை தேடி வருகின்றனர்.
ஆட்டோவில் பேட்டரி திருடிய வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்:
ஆட்டோவில் பேட்டரி திருடிய வாலிபரை கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். ஆரப்பாளையம் கண்மாய்க்கரை பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் 30.இவருக்கு சொந்தமான ஆட்டோவை ,அதே பகுதியில் நிறுத்தி இருந்தார். அப்போது, பட்டப்பகலில் ஆட்டோவில் வைத்திருந்த இரண்டு பேட்டரிகளை மர்ம நபர் திரும்பி கொண்டிருந்தார். இதைப்பார்த்த ஆட்டோவின் உரிமையாளரான ஆனந்த் அவரை விரட்டி பிடித்து கரிமேடு போலீசில் ஒப்படைத்தார். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் ,ஞான ஒளிபுரம் விசுவாசபுரி இரண்டாவது தொருவைச் சேர்ந்த செல்வம் 47 என்பது தெரியவந்தது. அவரை கரிமேடு போலீசார் கைது செய்தனர்.
ஜெய்ஹிந்த்புரத்தில் 50 ஆயிரம் மதிப்புள்ள பைக் திருட்டு:
மதுரை ஜெய்ஹிந்த்புரம் வீரமாகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துச்செல்வம் 32.இவருக்கு சொந்தமான ரூபாய் ஐம்பதாயிரம் மதிப்புள்ள பைக்கை பாரதியார் ரோட்டில் நிறுத்தியிருந்தார்.பின்னர், பார்த்தபோது அந்த பைக்கை மர்ம நபர் திருடிச்சென்று விட்டார். இந்த சம்பவம் குறித்து, முத்துச்செல்வம் ஜெய்ஹிந்துபுரம்போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு ஆசாமியை தேடி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu