விவேகானந்தா கல்லூரியில் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள்

திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது
திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பி மண்டலத்துக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
மதுரை காமராசர் பல்கலைக்கழக பி மண்டலத்துக்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையான இறகுபந்து, மேஜைப்பந்து மற்றும் சதுரங்கம் ஆகிய விளையாட்டுப் போட்டிகள் விவேகானந்த கல்லூரியில் நடைபெற்றன.
இப் போட்டிகளை, விவேகானந்த கல்லூரி செயலர் சுவாமி வேதானந்த, கல்லூரி முதல்வர் முனைவர் தி. வெங்கடேசன் தொடக்கி வைத்தனர். சதுரங்க போட்டியில், தியாகராஜ ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட் முதலிடமும், மதுரை கல்லூரி இரண்டாம் இடமும் மேஜைப்பந்து போட்டியில், மதுரை கல்லூரி முதல் இடமும், சரஸ்வதி நாராயணன் கல்லூரி இரண்டாம் இடமும், இறகுபந்து போட்டியில், வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி முதல் இடமும், சரஸ்வதி நாராயணன் கல்லூரி இரண்டாம் இடமும் பெற்றன.
வெற்றி பெற்ற கல்லூரி மாணவர்களுக்கு, விவேகானந்த கல்லூரி முதல்வர் வெங்கடேசன் பரிசுகளை வழங்கி பாராட்டினார். சௌராஷ்டிரா கல்லூரி, மதுரை கல்லூரி, வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி, மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, சரஸ்வதி நாராயணன் கல்லூரி, தியாகராஜ ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட், செந்தாமரைக் கல்லூரி மற்றும் மதுரை காமராஜ பல்கலைக்கழகம் ஆகிய கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர்கள் கலந்து கொண்டனர். இப் போட்டிகளை, விவேகானந்த கல்லூரி உடற்கல்வி இயக்குனர் முனைவர் ஜெ. நிரேந்தன் ஒருங்கிணைப்பு செய்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu