சோழவந்தான் அருகே நடந்த கிராம சபை கூட்டங்கள்

சோழவந்தான் அருகே நடந்த கிராம சபை கூட்டங்கள்

விக்கிரமங்கலம் ஊராட்சியில் கிராம சபா கூட்டம் நடந்தது. 

சோழவந்தான் விக்ரமங்கலம் பகுதியில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டன.

சோழவந்தான் மற்றும் விக்கிரமங்கலம் பகுதிகளில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது.

முதலைக்குளம் ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்திற்கு தலைவர் பூங்கொடிபாண்டி தலைமை தாங்கினார். உதவித் தலைவர் ரேவதி பெரிய கருப்பன் முன்னிலை வைத்தார். ஊராட்சிமன்றசெயலாளர் பாண்டி அறிக்கை வாசித்தார். விக்கிரமங்கலம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சிமன்றதலைவர் கலியுகநாதன் தலைமை தாங்கினார். உதவி தலைவர் செல்வம், முன்னிலை வைத்தார். ஊராட்சிமன்றசெயலாளர் பால்பாண்டி அறிக்கை வாசித்தார். இதில் பல்வேறு துறையைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

பானா மூப்பன்பட்டி கிராமத்தில் ஊராட்சிமன்றதலைவர் மகாராஜன் தலைமை தாங்கினார்.ஊராட்சி மன்ற செயலாளர்பாண்டி அறிக்கைவாசித்தார். வாடிப்பட்டிஒன்றியம் காடுபட்டி ஊராட்சியில் தலைவர் ஆனந்தன் தலைமையில் ஊராட்சி மன்ற செயலாளர் ஒய்யண்ணன் அறிக்கை வாசித்தார். முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கேபிள் ராஜாமுன்னிலை வகித்தார்.ஊராட்சிமன்ற செயலாளர் மனோபாரதி அறிக்கைவாசித்தார். தென்கரை ஊராட்சியில் தலைவர் மஞ்சுளா ஐயப்பன் தலைமையில் துணைத்தலைவர் கிருஷ்ணன் முன்னிலையில் ஊராட்சி செயலாளர் முனியராஜ் அறிக்கை வாசித்தார்.

இரும்பாடி ஊராட்சியில் ஈஸ்வரிபண்ணைசெல்வம் தலைமைதாங்கினார்.ஊராட்சிசெயலாளர் காசிலிங்கம் அறிக்கைவாசித்தார்.நாச்சிகுளம் ஊராட்சியில் தலைவர் சுகுமாரன் தலைமை தாங்கினார்.ஊராட்சிமன்றசெயலாளர் கதிரேசன் அறிக்கை வாசித்தார். மேலக்கால் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் முருகேஸ்வரி வீரபத்திரன் துணைத் தலைவர் சித்தாண்டி ஊராட்சி செயலாளர் விக்னேஷ் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கிராம சபை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கிராமசபை கூட்டத்தில் துணைத்தலைவர்,வார்டு உறுப்பினர்கள், யூனியன்பணியாளர்,சமூக ஆர்வலர்,அங்கன்வாடிபணியாளர்,வருவாய்த் துறையினர்,பொதுப்பணித்துறையினர்,சுகாதாரத் துறையினர் உள்பட பல்வேறு துறையினர் கலந்து கொண்டனர்.

Next Story