/* */

சோழவந்தான் அருகே அரசு பஸ் டிரைவரை தாக்கிய வழக்கில் இருவர் கைது

சோழவந்தான் அருகே அரசு பஸ் டிரைவரை தாக்கிய வழக்கில் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

HIGHLIGHTS

சோழவந்தான் அருகே அரசு பஸ் டிரைவரை தாக்கிய வழக்கில் இருவர் கைது
X

மதுரை ஆரப்பாளையத்தில் இருந்து சோழவந்தான் வழியாக இரும்பாடி கருப்பட்டி மார்க்கமாக நிலக்கோட்டை வரை செல்லும் அரசு பஸ் இன்று காலை 11 மணி அளவில் இரும்பாடி கருப்பட்டி ரோட்டில் செல்லும் பொழுது மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் பஸ்ஸை வழிமறித்து டிரைவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில் ,டிரைவர் சண்முகவேல் என்பவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று சோழவந்தான் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் பேரில், சோழவந்தான் இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டி சப்-இன்ஸ்பெக்டர் சேகர் ஆகியோர் அரசு பஸ் டிரைவரை தாக்கி காயம் ஏற்படுத்திய கருப்பட்டி விக்கி என்ற விக்னேஸ்வரன் 22. அம்மச்சியாபுரம் மதனபாபு 21. ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர் .

தப்பி ஓடிய அம்மசியாபுரம் முனியராஜை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். மது கஞ்சா போதையில் அரசு பேருந்து டிரைவர் மற்றும் நடத்துனரை தாக்கியதுடன் அவர்களுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகாத வார்த்தைகள் பேசிய வீடியோ தற்போது, சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Updated On: 13 April 2024 9:18 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!