ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு: இனிப்பு வழங்கி வரவேற்ற திமுக

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு: இனிப்பு வழங்கி வரவேற்ற திமுக
X

வாடிப்பட்டியில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய திமுகவினர்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பஸ் நிலையம் முன் திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்

வாடிப்பட்டியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்று திமுகவினர் இனிப்பு வழங்கிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

உச்சநீதி மன்றத்தில் ஜல்லிக்கட்டுக்கு போட்டிக்கு தடை இல்லை என்று ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டது. மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பஸ் நிலையம் முன், வாடிப்பட்டி பேரூர் தி.மு.க சார்பாக பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பேரூராட்சி செயலாளர் மு பால்பாண்டியன் தலைமை வகித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் பேரூர் அவைத்தலைவர் திரவியம், பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்தி, கவுன்சிலர் ஜெயகாந்தன், வார்டு செயலாளர் ராம் மோகன், மருது, சக்திவேல், முரளி, அரவிந்த், ராஜசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!