/* */

சோழவந்தான் அருகே பலத்த மழை: குடியிருப்புகளுக்குள் புகுந்த மழைநீர்

சோழவந்தான் அருகே பலத்த மழையால், குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.

HIGHLIGHTS

சோழவந்தான் அருகே பலத்த மழை: குடியிருப்புகளுக்குள் புகுந்த மழைநீர்
X

குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழை வெள்ளம். 

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே காடுபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகரில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக குடியிருப்புக்குள் மழைநீர் புகுந்துள்ளது. இதனால், பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். கால்வாய் வசதி இல்லாததாலும், ஊராட்சி நிர்வாகத்தினர் பணிகளை செய்யாததாலும், மிகவும் சிரமப்படுவதாகவும், மழை நீர் புகுந்ததால் பூச்சிகள் மற்றும் விஷ ஜந்துக்கள் வருவதால் அச்சத்துடன் இருப்பதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

ஆகையால், சம்பந்தப்பட்ட காடுபட்டி ஊராட்சி நிர்வாகம், உடனடியாக மழைநீரை வெளியேற்றி பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும், கால்வாய் வெட்டும் பணிக்காக தோண்டிய மூடாமல் இருப்பதால், தண்ணீர் வெளியேற வசதி இல்லாததாலும், மழை பெய்தவுடன் வீட்டுக்குள் தண்ணீர் வந்துவிடுவதாக கூறுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து பார்வையிட்டு, தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

Updated On: 1 Dec 2021 12:45 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...
  2. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...
  6. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  7. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  9. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  10. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!