சோழவந்தானில் பசுஞ்சாணத்தில் பூஜை பொருட்கள் தயாரிப்பதற்கு பயிற்சி

சோழவந்தானில் பசுஞ்சாணத்தில் பூஜை பொருட்கள் தயாரிப்பதற்கு பயிற்சி
X

சோழவந்தானில் பசுஞ்சாணத்தில் பூஜை பொருட்கள் தயாரிப்பதற்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

மதுரை மாவட்டம் சோழவந்தானில் பசுஞ்சாணத்தில் பூஜை பொருட்கள் தயாரிப்பதற்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

விக்கிரமங்கலத்தில் பசுஞ்சாணம் மூலம் பூஜை பொருட்கள் தயாரிப்பதற்கு பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே விக்கிரமங்கலத்தில் கிராமப் பெண்கள் முன்னேற்ற சங்கம் மற்றும் விஷ்ரம் சித்தாசிரமம் பாரம்பரிய நாட்டு மாடுகள் ஆராய்ச்சி மற்றும் மீட்பு இயக்கம் சார்பில் பசுஞ்சாணத்தில் பூஜை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கிராம முன்னேற்ற சங்க செயலாளர் பசும்பொன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

டபிள்யூ.சி.பி.ஏ. மெம்பர் அசோசியேசன் பேராசிரியர் டாக்டர் ரஜிதா தலைமை தாங்கினார். தமிழ் மருத்துவ நிபுணர் நிர்வாக அறங்காவலர் விசுரம் சித்தாஸ்ரமம் மருத்துவர் நாக தீபா அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் முத்தரசு ஆகியோர் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.

விக்கிரமங்கலம் கனரா வங்கியின் சீனியர் மேலாளர் ராம்குமார் சிறப்புரை ஆற்றினார். ஜி பி எம் எஸ் ஆர்கனைசர் ராஜி மற்றும் செல்லம்பட்டி ஊராட்சி வடக்கு ஒன்றிய மகளிர் அணி தலைவி தெய்வானை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் மகளிர் குழு பெண்களுக்கு பசுஞ்சாணம் மூலம் பூஜை பொருட்கள் தயாரிக்கும் முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. முடிவில் ஜி பி எம் எஸ் பவித்ரா நன்றி கூறினார்.

Tags

Next Story