மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே 3 இடங்களில் போலீஸ் புகார் பெட்டி

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே 3 இடங்களில் போலீஸ் புகார் பெட்டி

விக்கிரமங்கலம் பகுதியில் காவல்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டி

மதுரை காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவின்பேரில் போலீஸார் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் பகுதிகளில் காவல்துறை சார்பில் மூன்று இடங்களில் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட கிராமங்களில் 3 இடத்தில் புகார் பெட்டி வைக்கப்பட்டது. மதுரை காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவின்பேரில், உசிலம்பட்டி டிஎஸ்பி நல்லு ஆலோசனையின் பேரில், விக்கிரமங்கலம் காவல் நிலையத்துக்கு உள்பட்ட எரவார்பட்டி ஊராட்சி மன்றம் அலுவலகத்திற்கு முன்பாக விக்கிரமங்கலம் காவல் நிலையம் சார்பில் பொதுமக்களுக்கு வசதியாக புகார் பெட்டி வைக்கப்பட்டது.

இதில், காவல் ஆய்வாளர் சிவசக்தி உதவி ஆய்வாளர்கள் வெற்றிவேல், ராஜேந்திரன், ஊராட்சி மன்றத் தலைவர் பாண்டி, துணைத் தலைவர் செந்தாமரை, ஊராட்சி செயலாளர் மலைச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல், நரியம்பட்டி பிரிவு, நடுமுதலைக்குளம் கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு போலீசார் புகார் பெட்டி வைத்துள்ளனர்.

Tags

Next Story