/* */

அலங்காநல்லூர் அருகே இளம் பெண் படுகொலை: போலீசார் விசாரணை

அலங்காநல்லூர் அருகே இளம் பெண் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

அலங்காநல்லூர் அருகே இளம் பெண் படுகொலை: போலீசார் விசாரணை
X

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே குறவன்குளம் ஏடி காலனியை சேர்ந்தவர் வேங்கையன் (36). இவரது மனைவி கண்ணம்மாள் (29). இவர்களுக்கு திருமணமாகி 8 வருடங்கள் ஆன நிலையில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த மனைவி கண்ணம்மாள் அழகர்கோவில் அருகே சுந்தராஜன்பட்டியில் உள்ள தன் தாய் வீட்டில் கடந்த ஒரு வருடமாக வசித்து வந்துள்ளார். இதனால், சென்னைக்கு சென்ற வேங்கையன் அங்குள்ள தனியார் கம்பெனியில் வாட்ச்மேனாக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையிலிருந்து வந்த வேங்கையன் தனது மனைவி வீட்டில் சமரசம் பேசி சேர்ந்து வாழ அழைத்துள்ளார். இதைத்தொடர்ந்து, வேங்கையன் சொந்த ஊரான குறவன்குளத்தில் வீடு கட்டி சேர்ந்து வாழலாம் என முடிவு செய்து குடும்பத்துடன் குறவன்குளத்தில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை இவர்களது வீட்டின் அருகே உள்ள கருவை மர காட்டுபகுதியின் சாலையோரத்தில் கண்ணம்மாள் தலை மற்றும் கழுத்துப் பகுதியில் வெட்டி கொலை செய்யபட்டு பிணமாக கிடந்தார். தகவலறிந்த அலங்காநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த அலங்காநல்லூர் போலீசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.

Updated On: 19 Feb 2022 7:33 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!
  3. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை...
  4. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  5. சிங்காநல்லூர்
    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்ததாக புகார்
  6. லைஃப்ஸ்டைல்
    பிறப்பை கொண்டாடுவோம் வாங்க..! பிறந்தநாள் வாழ்த்து சொல்வோமா..?
  7. வீடியோ
    🔴LIVE : சத்யராஜ் மீண்டும் சர்ச்சை பேச்சு | WEAPON Movie Press Meet...
  8. கோவை மாநகர்
    கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மேற்கூரை சரிந்து விபத்து ; டூவிலர்கள்
  9. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,192 கன அடியாக அதிகரிப்பு