/* */

அலங்காநல்லூர் அருகே புதிய அங்கன்வாடி மையங்களை திறந்த வைத்த அமைச்சர்

அலங்காநல்லூர் ஒன்றியத்தில் ஊராட்சியில், குடிநீர் மேல்நிலை தொட்டி அங்கன்வாடி மையம், நியாய விலைக்கடையை அமைச்சர் திறப்பு

HIGHLIGHTS

அலங்காநல்லூர் அருகே புதிய  அங்கன்வாடி மையங்களை திறந்த  வைத்த அமைச்சர்
X

அலங்காநல்லூர் அருகே மேல்நிலை குடிநீர் தொட்டி மற்றும் அங்கன்வாடி மையங்களை திறந்துவைத்த அமைச்சர் மூர்த்தி

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம், மாணிக்கம்பட்டி ஊராட்சியில், குடிநீர் மேல்நிலை தொட்டி அங்கன்வாடி மையம், நியாய விலைக்கடை ஆகியவற்றை அமைச்சர் மூர்த்தி திறந்துவைத்து, குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், சோழவந்தான் எம்.எல்.ஏ .வெங்கடேசன், அவைத்தலைவர் பாலமேடு பாலசுப்பிரமணியன், பொதுக்குழு உறுப்பினர் தனராஜ், ஒன்றியச்செயலாளர் கென்னடி கண்ணன், ஊராட்சி ஓன்றிய ஆணையாளர் கதிரவன், ஊராட்சி மன்றத்தலைவர் ஜெயமாலா பாலமுருகன், துணைத்தலைவர் ராஜேஷ், ஊராட்சி எழுத்தர் பெரிச்சி உள்பட கிராம பொதுமக்கள் பங்கேற்றனர்.

Updated On: 31 May 2022 7:45 AM GMT

Related News