அலங்காநல்லூரில் பழுதான டிரான்ஸ்பார்மர் சீரமைக்கும் பணிகள் தொடக்கம்

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் பகுதியில் இடி மின்னலால் பழுதான டிரான்ஸ்பார்மர்களை சீரமைக்கும் பணிகளை மின்வாரியத்தினர் மேற்கொண்டனர்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியில் கடந்து 3 நாட்களாக இரவு நேரங்களில் இடி, மின்னல், பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால், பழுதடைந்த மின்கம்பங்கள், பழமையான டிரான்ஸ்பார்மர்கள் கோளாறு ஏற்பட்டு அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இந்நிலையில், நேற்று பெய்த கன மழையில் அலங்காநல்லூர், கல்லணை பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மர் பழுதடைந்து இரவு முழுவதும் மின்தடை ஏற்பட்டது.
இதனால், அப்பகுதி பொதுமக்கள் இரவு முழுவதும் மின்சாரம் இல்லாமல் சிரமப்பட நேரிட்டது. இதைத் தொடர்ந்து, இன்று அதிகாலை முதலே அலங்காநல்லூர் பகுதி மின்சார ஊழியர்கள் பழுதடைந்த டிரான்ஸ்பார்மர்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். மின்வாரிய ஊழியர்களின் துரித நடவடிக்கையால் தடைபட்ட மின்சாரம் உடனடியாக சரியானது.
நள்ளிரவு முதல் இப்பகுதியில் மின்சார தடை ஏற்பட்டு சிரமப்பட்டு வந்த பொதுமக்கள் மின்சாரம் வந்ததால் நிம்மதி அடைந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu