/* */

சோழவந்தான் பேரூராட்சியில் மாபெரும் துப்புரவு பணி முகாம்

மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க கால்வாய்கள் அடைப்பு ஏற்பட கூடிய பகுதிகள் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டது

HIGHLIGHTS

சோழவந்தான் பேரூராட்சியில் மாபெரும் துப்புரவு பணி முகாம்
X

சோழவந்தான் போரூராட்சியில் நடைபெற்ற துப்புரவுப்பணியிலல் ஈடுபட்டுள்ள பணியாளர்கள்

மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சியில் மாபெரும் தூய்மைப் பணி முகாம் நடைபெற்றது.

மழைக்காலம் தொடங்குவதால் அரசு ஆணைக்கிணங்க மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியின் மெகா தூய்மைப் பணியினை கடந்த 20ஆம் தேதி முதல் 25-ம் தேதி வரை பேரூராட்சியின் அனைத்து வார்டுகளிலும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, தூய்மைப் பணியினை பேரூராட்சி செயல் அலுவலர் ஜீலான்பானு துவக்கி வைத்தார். சுகாதார ஆய்வாளர் மற்றும் இளநிலை உதவியாளர்கள் முத்துக்குமார், கல்யாணசுந்தரம் மற்றும் சோனை திலீபன் சக்கரவர்த்தி பணியாளர்கள் பூவலிங்கம், அசோக், சந்தோஷ் உள்ளிட்ட பணியாளர்கள் தூய்மை பணியினை மேற்கொண்டனர். மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க கால்வாய்கள் மற்றும் அடைப்பு ஏற்பட கூடிய பகுதிகள் என அனைத்துப் பகுதிகளிலும் தூய்மைப் பணிகளை மேற்கொண்டனர். கச்சிராயிருப்பு பாதை, வட்ட பிள்ளையார் கோவில், பேட்டை வைகை ஆற்றுப் பகுதி, வைகை ஆற்றின் கரையோரப்பகுதி, பேரூராட்சியின் விரிவாக்க பகுதிகளான, பசும்பொன் நகர், ஆர் எம் எஸ் காலனி ஆகிய பகுதிகளில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

Updated On: 22 Sep 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...