Begin typing your search above and press return to search.
முடுவார்பட்டி கொட்டாரன் சுவாமி ஆலயத்தில் குடமுழுக்கு
புனித நீரை கும்பகலசத்தில் சிவாச்சாரியார் ஊற்றிகுடமுழுக்கு செய்தனர். இதையொட்டி அன்னதானம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது
HIGHLIGHTS
அலங்காநல்லூர் அருகே முடுவார்பட்டி கொட்டாரன் சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற குடமுழுக்கு விழா நடைபெற்றது.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம், முடுவார்பட்டி உள்ள ஸ்ரீ கொட்டாரன் சுவாமி திருக்கோவில்லில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக கணபதி ஹோமம், கலச ஸ்தாபனம், பாலிகை பூஜை, யாகபூஜைகள், பூர்ணாஹுதி, யாத்திரா தானம் ஆகிய பூஜைகள் நடைபெற்றது. விழாவில், புனித நீரை கும்பகலசத்தில் சிவாச்சாரியார் ஊற்றினர். தொடர்ந்து, அன்னதானம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.