/* */

சுகாதார வள மையம் அருகே குப்பைகள்: தேனூர் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா

தேனூர் ஊராட்சி தச்சம்பத்து கிராமத்தில் பெண்கள் சுகாதார வளாகம் அருகிலேயே குப்பைகளை கொட்டப்படுவதை தடுக்க வேண்டுமன கோரிக்கை

HIGHLIGHTS

சுகாதார வள மையம் அருகே குப்பைகள்:  தேனூர் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா
X

பைல் படம்

மதுரை மாவட்டம், சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட தேனூர் ஊராட்சி தச்சம்பத்து கிராமத்தில், பெண்கள் சுகாதார வளாகம் அருகிலேயே குப்பைகளை கொட்டப்படுவதால், சுகாதார கேடு ஏற்படுவதாக சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வேதனை தெரிவிக்கின்றனர் .

இந்தப் பகுதியில், பெண்கள் சுகாதார வளாகம் உள்ள மெயின் ரோட்டில் சுமார் ஒரு மாதத்திற்கும் மேலாக இந்த பகுதி பொதுமக்கள் குப்பைகளை கொட்டுவதால், குப்பைகள் தேங்கி ஒரு வித துர்நாற்றம் வீசுவதாகவும் ,இந்த பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுவதாகவும் இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், இது குறித்து தேனூர் ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் பலமுறை எடுத்துக் கூறியும், ஊராட்சி மன்ற தலைவரோ ஊராட்சி செயலாளரோ எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லையாம். ஊராட்சி மன்றம் சார்பாக, தினசரி வீடுகளுக்கு குப்பை வாங்க வருபவர்கள் வராத காரணத்தால் இந்த பகுதி பொதுமக்கள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சாலையில் குப்பைகளை கொட்டுவதால் குப்பைகள் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர்.

ஆகவே, மதுரை மாவட்ட ஊராட்சி நிர்வாகம், குப்பைகளை அகற்ற ஊராட்சி நிர்வாகத்துக்கு ஆலோசனைகள் வழங்க, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆகையால் உடனடியாக ஊராட்சி நிர்வாகம் குப்பைகளை அள்ளி பெண்கள் சுகாதார வளாகத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எடுத்துள்ளனர்.






Updated On: 26 Nov 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    காரியாபட்டி அருகே, வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து ஆறு பேர்...
  2. கவுண்டம்பாளையம்
    கோவையில் கனமழையால் சாலைகளில் தேங்கிய வெள்ள நீர் ; வாகன ஓட்டிகள்...
  3. கோவை மாநகர்
    பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு : தலைமறைவான ஓட்டுநர்...
  4. இந்தியா
    நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய 7 வழி...
  5. ஆன்மீகம்
    கொஞ்சம் பாலும் தேனும் கொடுங்க..! அறிவை அள்ளித்தருவார் விநாயகர்..!
  6. இந்தியா
    அரசியல் கட்சி மீது வழக்கில் குற்றம் சாட்டிய அமலாக்கத்துறை: நீதித்துறை...
  7. அருப்புக்கோட்டை
    வெடி விபத்து: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை
  8. ஈரோடு
    ஆபத்தை உணராமல் காட்டாற்று வெள்ளத்தை கடந்த கடம்பூர் மலைக்கிராம...
  9. அரசியல்
    மத்தியில் ஆட்சி அமைக்க மெஜாரிட்டி கிடைத்து விட்டது: அமித்ஷா பேச்சு
  10. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் கொண்டாடும் குதூகல நாள்..! வாழ்த்துங்க..!