சோழவந்தான் அரசுப் பள்ளியில் இலவச மிதிவண்டிகள் வழங்கும் விழா

பேரூராட்சி தலைவர் ஜெயராமன் தலைமை வகித்து, 277.மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்
சோழவந்தான் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் ஜெயராமன் தலைமை வகித்து, 277.மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். இதில் தலைமையாசிரியை தீபா, பள்ளி கல்வி குழ தலைவி தமிழ்இலக்கியா, பேரூராட்சி துணை தலைவர் லதாகண்ணன், பணி நியமனக்குழு ஈஷ்வரி, ஸ்டாலின் எட்டாவது வார்டு கவுன்சிலர் தொழிலதிபர் டாக்டர் மருதுபாண்டியன், உதவி தலைமையாசிரியை உமாமகேஷ்வரி, பேரூர் செயலாளர் சத்தியபிரகாஷ், பேரூர் துணைச் செயலாளர்கள் சோழவந்தான் ஸ்டாலின், கொத்தாலம் செந்தில், வார்டு கவுன்சிலர்கள் சிவா, நிஷாகௌதம், குருசாமி, முத்துசெல்விசதீஷ்.
முள்ளிப்பள்ளம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கேபிள் ராஜா, மில்லர், இளமாறன்.,ஒன்றிய கவுன்சிலர்கள் ரேகாவீரபாண்டி, சுப்பிரமணி,கார்த்திகாஞானசேகரன், தீர்த்தம், ராஜாபெரியகருப்பன். பேரூர் முன்னாள் செயலாளர் முனியாண்டி, நாகேந்திரன், அழகர்சாமி, வீரபாண்டி,. சங்கரபாண்டி, முட்டை கடை காளி, மணிபாண்டி, மாணவரணி எஸ். ஆர். சரவணன் மற்றும் ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஆலங்கொட்டாரம் அரசஞ்சண்முகனார் மேல்நிலைப்பள்ளியில் 32.மாணவ.மாணவிகளுக்கு விலையில்லா மிதிவாண்டிகள் வழங்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu