/* */

சோழவந்தான் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு

சோழவந்தான் அருகே தோட்டத்திற்கு சென்ற விவசாயி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

சோழவந்தான் அருகே  மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு
X

மின்சாரம் தாக்கி இறந்த முதியவர் ஆலடி.

சோழவந்தான் அருகே முள்ளிப் பள்ளத்தில் மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்தார்.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஆலடி (வயது 65.).இவர் இன்று காலைகடன் முடிப்பதற்காக முள்ளிப்பள்ளம் குருவித்துறை ரோட்டில் உள்ள தனியார் தோப்பில் சென்றுள்ளார்.எதிர்பாராத விதமாக அங்கு குறுக்கே சென்ற மின் வயர் தென்னை மரத்தில் உரசியதில் ஆலடிமீது மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து விட்டார்.

இது குறித்து முள்ளிப்பள்ளம்கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரன், கிராம உதவியாளர் ராமமூர்த்தி ஆகியோர் காடுபட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதன் பேரில் காடுபட்டி சப்-இன்ஸ்பெக்டர் ராஜு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

சோழவந்தான் அருகே பல கிராமங்களில் தாழ்வாக மரங்களை ஒட்டி செல்லும் மின்சார வயர்களை, மின்சார வாரியம் சரி செய்ய வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.

Updated On: 24 May 2024 11:06 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    இஸ்ரேல் நாட்டு பிரதமர் நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
  2. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் தொடர்பாக அமித்ஷா ஆலோசனை
  3. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் அ.தி.மு.க.விற்கு தாவிய பா.ஜ.க., தி.மு.க....
  4. தமிழ்நாடு
    ஜூன் 20 ம்தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை ரத்து என தகவல்
  5. லைஃப்ஸ்டைல்
    மனித அறிவாற்றல் அதிகரிக்க ஐந்து அடிப்படை வழிமுறைகள் பற்றி...
  6. லைஃப்ஸ்டைல்
    போலி சமையல் எண்ணெயை கண்டறிவது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    அடேங்கப்பா...! ஊற வைத்த வேர்க்கடலையில் இத்தனை மகத்துவமான விஷயங்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    பெயர் சொன்னவுடன் வாயில் எச்சில் ஊறச் செய்யும் பச்சை மாங்காய் - அதுல...
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி அருகே சீராத்தோப்பு முத்து நகர் பகுதியில் மரம் நடும் விழா
  10. குமாரபாளையம்
    பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு மாத முதல் ஞாயிறு சிறப்பு வழிபாடு