வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனை நிலையத்தில் தேங்காய் ஏலம்

சோழலந்தான் அருகே வாடிப்பட்டியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை நிலையத்தில் நடைபெற்ர தேங்காய் ஏலம்
வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.
மதுரை வேளாண் விற்பனைக் குழுவின் வாடிப்பட்டி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், இன்று 16 விவசாயிகளின் 46 ஆயிரத்து 20 தேங்காய்கள் ஏலம் விடப்பட்டது.
இன்றைய ஏலத்தில் 16 விவசாயிகளின் 46020 தேங்காய்கள் 23குவியலாக ஏலம் விடப்பட்டது. இன்று நடந்த ஏலத்தில்14வியாபாரிகள் பங்கு பெற்றனர். இன்று நடைபெற்ற ஏலத்தில் அதிகபட்சமாக விலையாக ரூ 9.60 க்கும் குறைந்த பட்சமாக ரூ 7.16 க்கும் சராசரியாக ரூ 8.40 க்கும் ஏலம் போனது குறிப்பிடத்தக்கது. மேலும், ரூபாய் 3.76 லட்சத்திற்கு தேங்காய் வர்த்தகம் நடைபெற்றது
மேலும், 5 விவசாயின் 167 கிலோ கொப்பரை ஏலம் விடப்பட்டது. இதில் 5 வியாபாரிகள் பங்கேற்று அதிகபட்சமாக 86.60 ரூபாய்க்கு ஏலம் போனது. குறிப்பிடத்தக்கது. ரூ.. 11116 - க்கு கொப்பரை வர்த்தகம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது..மேலும், தகவல் அறிய வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் மேற்பார்வையாளர்சீனிகுருசாமி, 9600802823-என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu