சோழவந்தான் காவல் நிலையத்தில் பிரிவு உபச்சார விழா

சோழவந்தான் காவல் நிலையத்தில் பிரிவு உபச்சார விழா

சோழவந்தான் காவல் நிலையத்தில் ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளருக்கு நடந்த பிரிவு உபசார  விழா

பணி ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் பணியை பாராட்டி உயரதிகாரிகள் நினைவுப் பரிசு வழங்கினார்

மதுரை மாவட்டம், சோழவந்தான் காவல் நிலையத்தில் பணியாற்றி ஒய்வு பெற்ற உதவி ஆய்வாளருக்கு பிரிவு உபச்சார விழா நடைபெற்றது.

சோழவந்தான் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த ராஜேந்திரன் வயது முதிர்வு காரணமாக ஓய்வு பெற்றார். இதற்கான பிரிவு உபச்சார விழா காவல் நிலையத்தில் நடைபெற்றது. காவல் ஆய்வாளர் சிவபாலன் தலைமை வகித்தார். நிலைய எழுத்தர் விக்கிரம பாண்டி வரவேற்றார். சமயநல்லூர் துணைக் கண்காணிப்பாளர் பாலசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் பணி குறித்து பாராட்டிப் பேசி நினைவுப் பரிசு வழங்கினார். இதைத்தொடர்ந்து, காடுபட்டி சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் பால்ராஜ், முத்தையா ஆகியோர் பேசினார்கள். தலைமை காவலர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.

Tags

Read MoreRead Less
Next Story