Begin typing your search above and press return to search.
சோழவந்தான் தொகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த எம்எல்ஏ
வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்
HIGHLIGHTS
சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் வெங்கடேசன் எம்எல்ஏ வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்:
மதுரை மாவட்டம், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம்எல்ஏ சோழவந்தான் தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக,வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
இதில், மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் மருது, வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன், சோழவந்தான் பேரூர் கழக செயலாளர் முனியாண்டி, மாவட்ட நிர்வாகி வழக்கறிஞர் முருகன், மணிவேல் ,முள்ளிப்பள்ளம் ஊராட்சி செயலாளர் டி ராஜா, ஒன்றியக் கவுன்சிலர் ஞானசேகரன், ஊராட்சி மன்றத் தலைவர் பழனிச்சாமி ,முன்னாள் ஊராட்சி செயலாளர் சப்பாணி ,மகளிரணி சந்தான லட்சுமி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் லட்சுமி மார்நாட்டான், தெய்வேந்திரன், காமாட்சி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.