வாடிப்பட்டியில் சொத்துவரி உயர்வைக் கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்

வாடிப்பட்டியில் சொத்துவரி உயர்வைக் கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்

வாடிப்பட்டியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்.

சொத்து வரியை உயர்த்திய திமுக அரசைக் கண்டித்து, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் வாடிப்பட்டியில் சொத்து வரியை உயர்த்தி அதிமுக அரசை கண்டித்து, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் மு.காளிதாஸ் வரவேற்புரை ஆற்றினார். எம்.எல்.ஏ. ஐயப்பன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சரவணன், கருப்பையா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

ஒன்றியச் செயலாளர்கள் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன், செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் ராஜா அலங்காநல்லூர் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், மேற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், திருமங்கலம் ஒன்றிய செயலாளர் அன்பழகன், வாடிப்பட்டி யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ்கண்ணா, நிர்வாகிகள் ராஜேஷ்கண்ணா, மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் வழக்கறிஞர் லட்சுமி, ஒன்றிய செயலாளர் வனிதா, வாடிப்பட்டி பேரூர் நிர்வாகி சோனை வாடிப்பட்டி பேரூராட்சிக் கவுன்சிலர் டாக்டர் அசோக், விவசாயப் பிரிவுச் செயலாளர் வாவிடமருதூர் குமார், குமாரம் பாலன் , மணிமாறன், காளிதாஸ், கள்வேளிபட்டி முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாரி, தென்கரை நாகமணி, கோட்டைமேடு பாலா, சோழவந்தான் நகர இளைஞரணி மணி, தேனூர் ஊராட்சி செயலாளர் பாஸ்கரன், கருப்பட்டி செந்தில், ஒன்றிய கவுன்சிலர்கள் கருப்பட்டி தங்கப்பாண்டி, நாச்சிகுளம் தங்கபாண்டியன், மருத்துவரணி கருப்பட்டி கருப்பையா உட்பட ஏராளமான நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியினர் அண்ணா தொழிற்சங்கத்தினர் உள்பட அதிமுகவின்அனைத்து பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story