சோழவந்தானில் 25 நாள்களாக இயங்கும் அதிமுக நீர் மோர் பந்தல்
சோழவந்தானில் அதிமுக சார்பில் 25 நாட்களாக நீர் மோர் வழங்கும் பணி தொடர்ந்து வருகிறது.
சோழவந்தானில் அதிமுக சார்பில் 25 நாட்களாக நீர் மோர் வழங்கும் பணி தொடர்ந்து வருகிறது.
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய கழகம் சார்பாக கடந்த மாதம் பத்தாம் தேதி சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பாக கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சியை முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான ஆர். பி. உதயகுமார் தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து வாடிப்பட்டி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட நிர்வாகிகள் மற்றும் சோழவந்தான் பேரூர் கழகத்திற்கு உட்பட்ட நிர்வாகிகள் ஒருங்கிணைந்து தினந்தோறும் பொது மக்களுக்கு நீர் மோர் வழங்கி வருகின்றனர். அதன்படி, இன்று 25 வது நாளாக நீர் மோர்.வழங்கும் நிகழ்ச்சியை ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நீர் மோர் தர்பூசணி பப்பாளி வெள்ளரிக்காய் போன்ற பொருட்களை வழங்கினார்.
இதில் வாடிப்பட்டி யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார் பேரூர் செயலாளர் முருகேசன் பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன் நகர இளைஞரணி செயலாளர் கேபிள் மணி கவுன்சிலர்கள் ரேகா ராமச்சந்திரன் டீக்கடை கணேசன் சண்முக பாண்டியராஜா மற்றும் நிர்வாகிகள் ஜெயபிரகாஷ் துரைக்கண்ணன்.
தண்டபாணி மன்னாடிமங்கலம் ராஜபாண்டி மருத்துவர் அணி கருப்பட்டி கருப்பையா ஒன்றிய கவுன்சிலர் கருப்பட்டி தங்கபாண்டி சோழவந்தான் பத்தாவது வார்டு கவுன்சிலர் மணிகண்டன். பி ஆர் சி நாகராஜ் மகாலிங்கம் சக்திவேல் பாண்டிமற்றும் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட நிர்வாகிகள் மகளிர் அணி நிர்வாகிகள்.பேரூர் கழகத்திற்கு உட்பட்ட நிர்வாகிகள் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள்.உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu