மதுரை அருகே திருமங்கலத்தில் செயின் பறிப்பு திருடனை மடக்கி பிடித்த போலீஸார்

மதுரை அருகே திருமங்கலத்தில் செயின் பறிப்பு திருடனை மடக்கி பிடித்த போலீஸார்
X

மதுரை மாவட்ட எஸ்பி. பாஸ்கரன்

தப்பியோடிய திருடனை விரட்டிச் சென்று கப்பலூர் கண்மாயில் வைத்து மடக்கிப் பிடித்து திருடு போன நகைகளை போலீசார் மீட்டனர்

செயின் பறிப்பு திருடனை மடக்கிப் பிடித்த திருமங்கலம் போலீசாருக்கு மதுரை மாவட்ட எஸ்பி பாராட்டு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பெண்ணிடம் 11.11.2021 காலை 11.00 மணிக்கு நகையை பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பித்து மதுரை வழியாக வருவதாக, விருதுநகர் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து, மதுரை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தகவலின்படி, மதுரை மாவட்ட திருமங்கலம் போலீசாருக்கு துரிதமாக திருடனை மடக்கிப் பிடிக்க தகவல் கூறப்பட்டது..

தகவலின் பேரில், திருமங்கலம் காவல் துணைக் கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையில், திருமங்கலம் அனைத்து சந்திப்பு சாலைகளிலும் போலீசார் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தபோது, திருமங்கலம் கப்பலூர் அருகே சார்பு ஆய்வாளர் மாரிகண்ணன் மற்றும் தலைமை காவலர் கண்ணன் ஆகிய இருவரும் தப்பிச்சென்ற செயின் பறிப்பு திருடனை விரட்டிச் சென்று, கப்பலூர் கண்மாயில் வைத்து மடக்கிப் பிடித்து திருடு போன நகைகளை மீட்டனர். தகவலை அறிந்து துரிதமாக செயல்பட்ட திருமங்கலம் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்பாஸ்கரன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று, திருமங்கலம் போலீசாரை பாராட்டினார். மேலும், இச்சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

Tags

Next Story