/* */

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்த மாநகராட்சி ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு

ஒப்பந்தப்புள்ளியில் பங்கேற்க விரும்புகிறவர்கள் வருகின்ற 31-ம் தேதி விண்ணப்பம் அளிக்கலாம்

HIGHLIGHTS

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்த மாநகராட்சி ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு
X

ஜல்லிக்கட்டு நடத்த மாநகராட்சி முதல் முறையாக ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடர்பாக, தென்கால் பாசன விவசாயிகள் சங்கம் அவனியாபுரம் கிராம கமிட்டி இடையே தொடர்ந்து கருத்து வேற்றுமையால் ஜல்லிக்கட்டு போட்டியை மாநகராட்சி ஒப்பந்தப்புள்ளி மூலம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக, அவனியாபுரம் கிராம கமிட்டி மற்றும் தென் கால் பாசன விவசாயிகள் சங்கம் இடையே தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இந்த நிலையில், மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பாக நேற்று ஜல்லிக்கட்டு கமிட்டியை நேரில் அழைத்து ஆலோசனை நடத்தப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் அனிஸ் சேகர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கிராம கமிட்டி மற்றும் தென் கால் விவசாயிகள் இடையே சமரசம் ஏற்படவில்லை. மதுரை மாநகராட்சி சார்பில் ஜல்லிக்கட்டு நடத்த டெண்டர் விடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, ஜல்லிக்கட்டு நடத்த உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

அதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மாநகராட்சி சார்பாக ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு வெளிட்டுள்ளது.ஜல்லிக்கட்டில் மேடை அமைக்கவும், பார்வையாளர்கள் அமரும் இடங்கள் மற்றும் காளைகள் நிற்கும் பகுதி பேரிகார்டு பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்டவற்றை பணிகள் செய்ய ஒப்பந்தப்புள்ளியில் பங்கேற்க விரும்புகிறவர்கள் வருகின்ற 31-ம் தேதி ஒப்பந்த புள்ளி பெற்று விண்ணப்பம் அளிக்கலாம் என மாநகராட்சி அறிவிப்பு வெளிட்டுள்ளது.

Updated On: 29 Dec 2021 2:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு