மதுரை அருகே கொலை வழக்கு தொடர்பாக 6 பேர் கைது: ஆட்டோ பறிமுதல்

மதுரை அருகே கொலை வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டதுடன் ஆட்டோ வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரை மாவட்டம், ஒத்தக்கடை காவல் நிலையத்தில் மதுரையைச் சேர்ந்த செல்லப்பாண்டி மற்றும் திருச்சியைச் சேர்ந்த சிங்காரவேல் ஆகிய இரு நபர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய எதிரிகளை கைது செய்ய மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.பாஸ்கரன், தனிப் படையினருக்கு உத்தரவிட்டிருந்தார். அதனடிப்படையில், மேற்படி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட பாலா என்ற பல்லு பாலா, ஓடைப்பட்டி, குண்டுமணி, ஜீவா நகர் பாலா, மதுரை பாண்டி செல்வம், கருப்பாயூரணி முத்தையா சந்திரன் கணேசன், ஆணையூர் கோபி என்ற கோகுல் , ஒத்தக்கடை ராஜா ஆகியோரை கைது செய்தும், அவரிடமிருந்து கொலைக்கு பயன்படுத்திய ஆட்டோக்கள் மற்றும் ஆயுதங்களை கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்ற காவலுக்கு உள்படுத்தப்பட்டனர். மேற்படி, கொலை வழக்கில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.பாஸ்கரன் பாராட்டினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu