அக்.2ல் இறைச்சி விற்க தடை விதிப்பு: மதுரை மாநகராட்சி அறிவிப்பு
![அக்.2ல் இறைச்சி விற்க தடை விதிப்பு: மதுரை மாநகராட்சி அறிவிப்பு அக்.2ல் இறைச்சி விற்க தடை விதிப்பு: மதுரை மாநகராட்சி அறிவிப்பு](https://www.nativenews.in/h-upload/2021/09/28/1321485-madurai-corporation.webp)
X
By - N. Ravichandran |28 Sept 2021 2:30 PM IST
காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2ம் தேதி இறைச்சி விற்க தடைவிதித்து, மதுரை மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில், அரசு உத்தரவின்படி, காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, வரும் 02.10.2021 (சனிக்கிழமை) அன்று, இறைச்சி விற்பனை மற்றும் ஆடு, மாடு வதை செய்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாக, மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எனவே, அந்த நாளில், ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட உயிரினங்களை வதை செய்வது மற்றும் விற்பனை செய்யக்கூடாது. மேற்கண்ட கடைகளையும் திறந்து வைக்கவும் கூடாது. மீறி செயல்படுபவர்களின் கடைகளில் உள்ள இறைச்சிகளை பறிமுதல் செய்வதுடன், அரசு ஆணையின்படி சட்டபூர்வமான நடவடிக்கை தொடரப்படும் என்று, மதுரை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu