/* */

பிராணிகளுக்கு வரியா? மதுரையில் நாட்டுமாடு நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பிராணிகளுக்கு, மதுரை மாநகராட்சி வரி விதிக்க ஆட்சேபம் தெரிவித்து, நாட்டுமாடு நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

பிராணிகளுக்கு வரியா? மதுரையில் நாட்டுமாடு நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
X

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், கால்நடைகள், செல்லப்பிராணிகளுக்கு வரிவிதிக்கும் உத்தரவை திரும்பப்பெறக்கோரி, ஆட்சியர் அலுவலகம் முன்பாக, மாட்டு நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மதுரையில், நாட்டு மாடு நலச்சங்கத்தினர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ,சோழவந்தானில் ஜல்லிக்கட்டு நடத்தியதற்கும், கடையநல்லூரில் கிடா முட்டு நடத்தியதற்கு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதை ரத்து செய்யக்கோரி, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, அந்த சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தொடர்ந்து, நாட்டு மாடுகளை பாதுகாக்கும் பொருட்டு அனைத்து மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும், மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், கால்நடைகள் மற்றும் செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்கள் கட்டாயம் வரி செலுத்த வேண்டும் என்ற மதுரை மாநகராட்சியின் உத்தரவை திரும்பப் பெற வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Updated On: 13 Sep 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...