மதுரை மாநகராட்சி சார்பில் மரக்கன்றுகள் நடவு: ஆணையாளர் அழைப்பு

மதுரை மாநகராட்சி சார்பில் மரக்கன்றுகள் நடவு:  ஆணையாளர் அழைப்பு
X
அந்தந்த மண்டல உதவி ஆணையாளர்களின் தொலைபேசி வாயிலாகவோ அல்லது குறைதீர் மையம் தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்

மதுரை மாநகராட்சி மியாவாக்கி (அடர்வனம்) முறையில் மரக்கன்றுகள் நட்டு பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, மதுரை மாநகராட்சி ஆணையர் ப. கார்த்திகேயன் வெளியிட்ட தகவல்: மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட சாலை ஓரங்கள், காலி இடங்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் மியாவாக்கி முறையில், மரக்கன்றுகள் 2021 அக்டோபர் 2 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்நிகழ்வுகளில், பங்கேற்று மரக்கன்றுகள் நடவும், கன்றுகளை பராமரிக்கவும் விருப்பம் உள்ளவர்கள், மண்டலம் 1 மற்றும் 3 -94437 39512, மண்டலம் 2 - 94437 39518 , மண்டலம் 4 - 98944 29957 , மைய குறைதீர் மையம்- 84284 25000. அந்தந்த மண்டல உதவி ஆணையாளர்களின் தொலைபேசி வாயிலாகவோ அல்லது குறைதீர் மையம் தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.

Tags

Next Story