மதுரை மாநகராட்சி சார்பில் செப்.1-ல் மண்டல மக்கள் குறைதீர்க்கும் முகாம்

மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.1-ல் நடைபெறவுள்ள சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் பொது மக்கள் கோரிக்கை மனுக்கள் கொடுத்து பயன்பெறலாம் .
இது தொடர்பாக மதுரா மாநகராட்சி வெளியிட்ட தகவல்: மதுரை மாநகராட்சி மண்டலம் 1 அலுவலகத்தில் பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் எதிர்வரும் 02.11.2021 (செவ்வாய்க் கிழமை) அன்று ஆணையாளர் கா.ப.கார்த்திகேயன், தலைமையில் நடைபெற உள்ளது. அதன்படி, எதிர்வரும் 02.11.2021 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 10.00 மணி முதல் 12.30 மணி வரை டி.பி.சாலையில் உள்ள மண்டலம் 1-அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும்; முகாம் நடைபெறுகிறது. இந்த குறைதீர்க்கும் முகாமில், பொதுமக்கள் குடிநீர், புதைசாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட தங்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன் பெறலாம்.
எனவே, பொதுமக்கள் தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியினை பின்பற்றியும், அந்தந்த மண்டலங்களில் நடைபெறும் குறைதீர்க்கும் முகாமில் அந்தந்த மண்டலத்திற்கு உட்பட்ட பொதுமக்கள் மட்டும் தங்கள் கோரிக்கை மனுக்களை குறைதீர்க்கும் முகாமில் கொடுத்து பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu