/* */

மதுரை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் முகாம்: ஆணையாளர்:

மதுரை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் செவ்வாய்கிழமை, மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறவுள்ளது.

HIGHLIGHTS

மதுரை மாநகராட்சியில்  நாளை மக்கள் குறைதீர்க்கும் முகாம்: ஆணையாளர்:
X

பைல் படம்.

மதுரை மாநகராட்சி மண்டலம் 4 அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நாளை 23.11.2021 (செவ்வாய்க்கிழமை) அன்று ஆணையாளர் கா.ப. கார்த்திகேயன் தலைமையில் நடைபெற உள்ளது. அதன்படி, நாளை 23.11.2021 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 10.00 மணி முதல் 12.30 மணி வரை மாநகராட்சி மண்டலம் 4 அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.

இதில், பொதுமக்கள் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட தங்கள் கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன் பெறலாம். அரசின் வழிகாட்டுதலின்படி முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியினை பின்பற்றியும் அந்தந்த மண்டலங்களில் நடைபெறும் குறைதீர்க்கும் முகாமில், அந்தந்த மண்டலத்திற்கு உட்பட்ட பொதுமக்கள் மட்டும் தங்கள் கோரிக்கை மனுக்களை குறைதீர்க்கும் முகாமில் கொடுத்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 22 Nov 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  2. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  3. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  4. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  7. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்