மதுரையில் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்த பெண் உட்பட 5 பேரை கைது

மதுரையில் சட்டவிரோதமாக மதுவிற்பனை  செய்த  பெண்  உட்பட 5 பேரை கைது
X
மதுரையில் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்த பெண் உட்பட 5 பேரை கைது செய்து, போலீசார் கைதனர்

மதுரையில் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்த பெண் உட்பட 5 பேரை கைது செய்து, போலீசார் அவர்களிடம் இருந்து மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

மதுரை செல்லூர் ரயில் தண்டவாளம் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக, தத்தனேரியை சேர்ந்த அன்பு மகன் பிரகாஷை( 24.) செல்லூர் போலீசார் கைதுசெய்து அவரிடமிருந்து பத்து பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதே போல்,பட்டிமேடு சுடுகாட்டருகே விற்பனை செய்ததாக தபால் தந்தி நகரை சேர்ந்த பாபு( 60.) கூடல்புதூர் போலீசார் கைது செய்து அவரிடமிருந்து ஆறு பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

டி.டி ரோட்டில் மது விற்பனை செய்த அவனியாபுரம் பராசக்தி நகரைச் சேர்ந்த அருண்( 33 )என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து இரண்டு பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அதைத் தொடர்ந்து, செம்பூரணி ரோட்டில் மெஸ் ஒன்றின் அருகே மது பாட்டில் விற்பனை செய்த காளியம்மாள்( 55 )என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து இரண்டு பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும்,செம்பூரணி ரோடு சந்திப்பு பகுதியில் விற்பனை செய்த அவனியாபுரம் வைக்கம் பெரியார் நகரைச் சேர்ந்த நாகராஜன்( 39.) என்பவரையும் கைது செய்த மதுவிலக்கு போலீசார் அவரிடம் இருந்து 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
ai solutions for small business