/* */

மதுரை மாநகரில் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளுக்கு அபராதம்

மதுரை மாநகராட்சி சாலைகளில், மாடுகளை சுற்றித்திரியவிட்ட மாட்டின் உரிமையாளர்களுக்கு ரூ2,03,500 அபராதம் விதிப்பு

HIGHLIGHTS

மதுரை மாநகரில் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளுக்கு அபராதம்
X

சாலைகளில் திரியும் மாடுகள் .  பைல் படம்

மதுரை மாநகராட்சி பகுதிகளில், பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் மாடுகள் சுற்றி திரிவதால் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு பல்வேறு விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இதனை தவிர்க்கும் பொருட்டு, மாநகராட்சியால் அவ்வப்போது மாடுகளின் உரிமையாளர்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை செய்யப்பட்டு வருகிறது.

மேலும், மதுரை மாநகராட்சி மற்றும் புளு கிராஸ் அமைப்பின் மூலமாக தகுதி வாய்ந்த மாடிபிடி வீரர்களை கொண்டு குழு அமைக்கப்பட்டு சாலைகளில் மாடுகளை விடும் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி , மதுரை மாநகராட்சி ஐந்து மண்டலங்களிலும் 27.11.2023 மற்றும் 28.11.2023 ஆகிய இரண்டு நாட்களில் மாநகராட்சி சுகாதாரப் பிரிவின் அலுவலர்கள் குழுவின் மூலம் நேரடியாக கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் சாலையில் சுற்றி திரிந்த மண்டலம் 1க்கு உட்பட்ட பகுதிகளில் 20 மாடுகள் பிடிக்கப்பட்டு ரூ.43,500 அபராதமும், மண்டலம் 2க்கு உட்பட்ட பகுதிகளில் 13 மாடுகள் பிடிக்கப்பட்டு ரூ.18000 அபராதமும், மண்டலம் 3க்கு உட்பட்ட பகுதிகளில் 27 மாடுகள் பிடிக்கப்பட்டு ரூ.61,500 அபராதமும், மண்டலம் 4க்கு உட்பட்ட பகுதிகளில் 54 மாடுகள் பிடிக்கப்பட்டு ரூ.64,500 அபராதமும், மண்டலம் 5க்கு உட்பட்ட பகுதிகளில் 16 மாடுகள் பிடிக்கப்பட்டு ரூ.16,000 அபராதமும் என, மொத்தம் 130 மாடுகள் பிடிக்கப்பட்டு மொத்தம் ரூ.2,03,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, மதுரை மாநகராட்சி பகுதிகளில் மாடுகள் வளர்ப்பவர்கள் தங்களது பாதுகாப்பில் தங்களுக்குரிய இடத்தில் மாடுகளை தொழுவத்தில் கட்டி பொதுமக்களுக்கும் மற்றும் போக்குவரத்திற்கும் இடையூறு இல்லாமல் வளர்க்க வேண்டும். பொதுமக்களுக்கும் மற்றும் போக்கு வரத்திற்கும் இடையூறாக சாலைகளில் கால்நடைகளை திரியவிடும் நபர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என, மதுரை மாநகராட்சியின் சார்பில் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

மதுரை அண்ணாநகர் மேலமடை, தாசில்தார் நகர், வீரவாஞ்சி, மருதுபாண்டியர், சௌபாக்யா விநாயகர், சித்தி விநாயகர், கோமதிபுரம், ஆறாவது மெயின்ரோடு, அன்பு மலர் தெரு உள்ளிட்ட பகுதிகளில், சாலைகளில் கால்நடைகள் சுற்றித் திரிவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

ஆகவே, மதுரை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக சாலைகளில் திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 28 Nov 2023 3:53 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு