/* */

சூளகிரி அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 2 பேர் பலி

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில்ம் இரண்டு பேர் பலியாயினர்

HIGHLIGHTS

சூளகிரி அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 2 பேர் பலி
X

சூளகிரி அடுத்த கிருஷ்ணகிரி ஓசூர் தேசிய நெடுஞ்சாலை பெட்ரோல் பங்க் அருகே , இன்று காலை கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே, ஓசூர் தேசிய நெடுஞ்சாலை எச் பி பெட்ரோல் பங்க் அருகே, இன்று காலை பெங்களூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்த கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து, நிலைதடுமாறி எதிரே வந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இரண்டு கார்களும் மோதிக்கொண்டதில், அப்பளம் போல் நொறுங்கியது. இதில், காரில் இருந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சூளகிரி போலீசார், தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தால் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பை சீர் செய்தனர்.

விபத்தில், இறந்தவர்கள் கர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதியை சேர்ந்த சுமந்த், வின்செண்ட் கோபி என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 26 Sep 2021 3:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?