/* */

மாணவியிடம் அத்துமீறிய வாலிபர் கைது: உடந்தையாக இருந்த 7 பேரும் சிக்கினர்

அஞ்செட்டி அருகே மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

மாணவியிடம் அத்துமீறிய வாலிபர் கைது: உடந்தையாக இருந்த 7 பேரும் சிக்கினர்
X

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ள தக்கட்டி பக்கமுள்ளது பேடரஹள்ளி. இந்த ஊரைச் சேர்ந்தவர் கேசவன் ( 21). இவர் 17 வயது மாணவி ஒருவரை காதலித்து வந்தார். முறை தவறிய இந்த காதலில், மாணவியை திருமணம் செய்து கொள்வதாகக்கூறி, இருவரும் நெருங்கிப் பழகினர். இதில், மாணவி கர்ப்பமானார்.

இதனிடையே, மாணவியை கேசவன் மருத்துவமனைக்கு அழைத்து சென்று கருவை கலைத்தார். இதற்கு கேசவனின் குடும்பத்தினர் உடந்தையாக இருந்தனர். இந்த விவகாரம் வெளியே தெரிய வர, மாணவியின் பெற்றோர் கேசவனிடம் கேட்டனர். இதனால், கேசவன் தரப்பினர் மாணவியின் பெற்றோரை மிரட்டியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக, பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் சார்பில், தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கிருத்திகா, அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பூரணம் விசாரித்து கேசவன் (21), சூர்யா என்கிற அழகேசன் (28), பச்சமுத்து (25), ஆனந்தன் (28), பச்சப்பன் (32), கிருஷ்ணன் (30), வாசன், மாதப்பன் ஆகிய 8 பேரையும் கைது செய்தனர். அவர்கள் மீது போக்சோ, ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Updated On: 24 July 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க