ஓசூர்: வீட்டின் பூட்டை உடைத்து 7 சவரன் தங்க நகை திருட்டு

X
By - K.Rajeshwari,Reporter |15 July 2021 11:30 AM
ஓசூர் அட்கோ அருகே வீட்டின் பூட்டை உடைத்து 7 சவரன் தங்க நகைகளை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த ராஜா செட்டித்தெரு பகுதியை சேர்ந்தவர் சதீஷா. இவர், அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம், தனது வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்று இருந்துள்ளார்.
பின்னர், காலையில் வந்து பார்த்தபோது வீட்டின் முன் கதவை உடைத்து, வீட்டு அலமாரியில் இருந்த ஏழு சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த சதீஷா, இதுகுறித்து ஓசூர் ஹட்கோ போலீசில் புகார் அளித்தார். போலீஸ் எஸ் ஐ வெங்கடேசன் வழக்குப்பதிவு செய்து, தங்க நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu