/* */

அக்குபஞ்சர் சிகிச்சை பெற்ற கர்ப்பிணி பெண் உயிரிழப்பு: போலீசார் விசாரணை

ஓசூர் அருகே அக்குபஞ்சர் சிகிச்சை பெற்ற கர்ப்பிணி பெண் உயிரிழந்தது தொடர்பாக ஓசூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

அக்குபஞ்சர் சிகிச்சை பெற்ற கர்ப்பிணி பெண் உயிரிழப்பு: போலீசார் விசாரணை
X

உயிரிழந்த கோரிமா.

ஒசூர் அருகேயுள்ள தொரப்பள்ளி அக்ரஹாரம் கிராமத்தை சேர்ந்தவர் ரியாஸ். பஞ்சர் ஒட்டும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கோரிமா. இவர்களுக்கு திருமணமாகி 3 பெண் பிள்ளைகள் உள்ளனர். தற்போது கோரிமா இரண்டு மாதம் கர்ப்பிணியாக உள்ளார். கோரிமா கடந்த சில நாட்களாக நெஞ்சுவலி, வயிற்றுவலி போன்ற நோய்களால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து அவரது கணவர் ரியாஸ் அவரை மருத்துவர்களிடம் அழைத்து சென்று மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு தொரப்பள்ளி அக்ரஹாரம் கிராமத்தில் ரியாஸ் தனது மனைவி கோரிமாவிற்கு அங்குள்ள ஒரு அக்குபஞ்சர் மருத்துவரிடம் மருத்துவம் பார்த்ததாக கூறப்படுகிறது.

மருத்துவம் பார்த்த சிறிது நேரத்தில் கோரிமா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து ரியாஸ் கோரிமாவை அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார். இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஒசூர் அரசு மருத்துவமனை உடற்கூறு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து ஒசூர் ஹட்கோ போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அக்குபஞ்சர் சிகிச்சை பெற்ற பின்னர் கர்ப்பிணி பெண் ஒருவர் உயிரிழந்ததால் மருத்துவத்துறையினரும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 9 Sep 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  3. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  5. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  6. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  7. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  8. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?
  10. இந்தியா
    சர்வதேச செவிலியர் தினம்: இந்திய ராணுவம் கொண்டாட்டம்