/* */

ஆக்கிரமிப்பு அட்டகாசம்: நீர் சூழாமல் இருக்க ஏரிக்கரையை உடைத்த நபர்கள்

ஏரிக்கு அருகில் கட்டப்பட்ட வீடுகள், ஏரி நீர் சூழாமல் இருக்க கரையை உடைத்த 4 பேரிடம் போலிசார் விசாரணை

HIGHLIGHTS

ஆக்கிரமிப்பு அட்டகாசம்: நீர் சூழாமல் இருக்க ஏரிக்கரையை உடைத்த நபர்கள்
X

ஒசூர் அருகே ஏரிக்கு அருகில் கட்டப்பட்ட வீடுகள், ஏரி நீர் சூழாமல் இருக்க கரையை உடைத்த 4 பேரிடம் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சோமநாதபுரம் கிராமத்தின் பின்புறமாக உள்ள ஏரி 6 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டது. அந்த ஏரியில் உள்ள பட்டா நிலத்தில் மகாராஜா என்னும் லே அவுட்டில் குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

தொடர்ந்து பெய்த மழையால் ஏரி நீர் நிரம்பி காட்சியளிக்கும் நிலையில், குடியிருப்புகளின் சுற்றுச்சுவர் வரை நிரம்பி இருக்கும் ஏரி நீரை வெளியேற்ற குடியிருப்பு வாசிகள் 4 பேர் கடப்பாறையால் ஏரிக்கரையை உடைத்ததில் நீர் கால்வாயில் வெளியேறி வீணானது. ஏரிக்கரையை உடைத்த 4 பேரை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து ஒசூர் நகர போலிசாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிவா(31), வினோத்(38), சிவக்குமார்(42), சின்னசாமி(61) ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பல மணிநேரங்களாக நீர் வீணான நிலையில் ஊராட்சி நிர்வாகத்தினர் சார்பில் மணல் மூட்டைகளை கொண்டு தடுத்து நிறுத்தப்பட்டது. மேலும் சம்பவயிடத்தில் ஒசூர் உதவி காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் நேரில் பார்வையிட்டார்.

Updated On: 2 Dec 2021 7:31 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...
  2. திருப்பூர்
    திருப்பூர்; 4 மையங்களில் 'நீட்' தேர்வெழுதிய மாணவ மாணவியர்
  3. ஆன்மீகம்
    சாய்பாபாவின் காலமற்ற ஞானம் - ஒரு வழிகாட்டும் ஒளி!
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!
  5. லைஃப்ஸ்டைல்
    ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே...’
  6. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  7. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60...
  9. நாமக்கல்
    நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...
  10. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே: சிறந்த 50 தமிழ் மேற்கோள்கள்!