/* */

கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மை கல்லூரியில் இளங்கலை பிரிவில் மாணவர் சேர்க்கை

ஓசூர் கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மை கல்லூரியில் பி.டெக்., இளங்கலை பாடத்திற்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

HIGHLIGHTS

கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மை கல்லூரியில் இளங்கலை பிரிவில் மாணவர் சேர்க்கை
X

பைல் படம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மை கல்லூரியில் பி.டெக்., இளங்கலை பாடத்திற்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வருகிற அக்டோபர் மாதம் 8ம் தேதி கடைசி நாளாகும்.

இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமாக ஓசூரில் கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் இளங்கலை பட்டமான பி.டெக்., (கோழியின தொழில்நுட்பம்) வழங்கி வருகிறது. இதில் ஒற்றை சாளர முறையில் சேர்க்கை நடைபெறும். 4 ஆண்டுகள் படிப்பான இதில் வருடாந்திர மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 40 மட்டுமே ஆகும். இதில் சேர விண்ணப்பிக்கும் மாணவர்கள் பிளஸ் 2 பாடத்திட்டத்தில் கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் படித்திருக்க வேண்டும். இப்படிப்பிற்கான தனி நுழைவுத் தேர்வு எதுவும் இல்லை. தமிழ்நாடு அரசின் விதிமுறைகளின்படி, குறைந்தபட்ச மதிப்பெண் தேவை மற்றும் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். கல்வி கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயம் செய்கிறது.

இதில் பட்டம் பெற்ற மாணவர்களுக்கு கோழியின தொழில்துறையில், தாயக்கோழிப் பண்ணைகள், குஞ்சு பொரிப்பகங்கள், தீவன ஆலை, ஆய்வகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் அதன் சார்ந்த துறைகளில் மேலாளர்களாக பணியமர்த்தப்படுகிறார்கள். மேலும், அகில இந்திய மற்றும் மாநில அளவிலான அரசு போட்டித் தேர்வுகளுக்கும் தகுதி பெறுகிறார்கள். மேலும் இந்த கல்லூரியானது, கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மையில் அனைத்து பிரிவுகளிலும் பயிற்சியளிக்க மற்றும் வழிகாட்ட, சிறந்த அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டுள்ளது.

இதில் பொறியியல் வளாகம், தொழில்நுட்ப வளாகம், உலகத்தரம் வாய்ந்த நவீனமயமாக்கப்பட்ட வகுப்பறைகள், சிறந்த ஆய்வகங்கள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனித்தனி விடுதி வசதி, அதிநவீன நூலகம் மற்றும் வை-பையுடன் கூடிய இணையதள வசதியும் கொண்டுள்ளது. இதில் சேர வருகிற அக்டோபர் மாதம் 8ம் தேதிக்குள் மாணவர்கள் தங்கள் விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 23 Sep 2021 2:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...