/* */

கர்நாடகாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 1584 மதுபாட்டில்கள் பறிமுதல்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே, கர்நாடகாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 1,584 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

கர்நாடகாவில் இருந்து கடத்தி வரப்பட்ட  1584 மதுபாட்டில்கள் பறிமுதல்
X

பர்கூர் அருகே, கர்நாடகாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 1,584 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில், திருப்பத்தூர் கூட்ரோடு பகுதியில் போலீஸ் எஸ்ஐ சங்கர் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசாரை பார்த்த ஒரு மாருதி கார் டிரைவர், சாலையோரம் காரை நிறுத்திவிட்டு, இறங்கி தலைமறைவானார்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார், அந்த காரை சோதனை செய்தனர். அதில் 33 பெட்டிகளில் ரூ. 1.50 லட்சம் மதிப்பிலான 1,584 மதுபாட்டில்கள் இருந்ததும், அந்த மதுபாட்டில்கள் கர்நாடகா மாநிலத்தில் இருந்து கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து மதுபாட்டில்களுடன் காரை பறிமுதல் செய்த போலீசார், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 8 Jun 2021 1:17 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  2. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  3. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  4. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  5. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  6. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
  7. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
  8. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...
  9. தமிழ்நாடு
    சேதமான அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு!
  10. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!