/* */

கிருஷ்ணகிரி ஆம்னி வேன் விபத்து- பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு

கிருஷ்ணகிரியில், லாரி - ஆம்னி வேன் மோதிய விபத்தில், காயடமடைந்து சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழந்ததை அடுத்து, பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

HIGHLIGHTS

கிருஷ்ணகிரி ஆம்னி வேன் விபத்து- பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு
X

கிருஷ்ணகிரியில் நடந்த சாலை விபத்தில் அப்பளம் போல் முன்பகுதி நொறுங்கிய ஆம்னி வேன்.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள துரிஞ்சி தலைப்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ். இரு தினங்களுக்கு முன்பு அவர், குடும்பத்துடன் ஆம்னி வேனில், குடியாத்தத்தில் இருந்து பெங்களூருவுக்கு சென்று கொண்டிருந்தார்.

கிருஷ்ணகிரி அருகே சுண்டம்பட்டி என்னும் இடத்தில், சென்னை - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் வேன் வந்தபோது, சாலையோரம் இருந்த கேஸ் டேங்கர் லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் வேனில் இருந்த ரமேஷ், அவரது மனைவி தீபா, மகன் நித்தீஷ் , உறவினர்கள் அஞ்சலி , சரளா ஆகிய 5 பேர் இறந்தனர்.

மேலும், காரில் இருந்த சரளாவின் குழந்தைகள் சாரிகா ஓவியா, மற்றும் சதீஷ்குமார் என்பவரின் மகன் நித்தின் ஆகிய 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை, அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சிறுவன் நித்தின் மட்டும், மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தான்.

இதன் மூலம் இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்து குறித்து கந்திகுப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

#இன்ஸ்டாநியூஸ் #தமிழ்நாடு #பர்கூர் #சுண்டம்பட்டி #கார் #கேஸ்லாரி #விபத்து #பலிஉயர்வு #சிறுவன் #accident #anothar #boy #death #bargur #tamilnadu #van #students #கிருஷ்ணகிரி #tamilnadu

Updated On: 3 Jun 2021 9:38 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்