/* */

கோடநாடு வழக்கு விசாரணை ஜன 28-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

அரசு தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டதால் நீதிபதி இந்த வழக்கினை, ஜனவரி 28 க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

HIGHLIGHTS

கோடநாடு வழக்கு விசாரணை ஜன 28-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
X

நீலகிரி மாவட்டம், கொடநாடு எஸ்டேட்டில், 2017ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி, நள்ளிரவு 11 பேர் கொண்ட கும்பல் உள்ளே நுழைந்தது. அங்கு பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூரை கொலை செய்து விட்டு, பங்களாவில் இருந்த பொருட்களை கொள்ளை அடித்து தப்பி சென்றனர். இது தொடர்பாக, கேரளாவை சேர்ந்த சயான் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். வழக்கு விசாரணை உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில், 4 ஆண்டுகாலமாக நடந்து வருகிறது.

இவ்வழக்கில், கூடுதல் விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, ஏ.டி.எஸ்.பி. கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக அரசு தரப்பு சாட்சிகள்/ குற்றம் சாட்டப்பட்டவர்கள் என அனைவரிடமும் விசாரணை நடந்து வருகிறது.

வழக்கில் திடீர் திருப்பமாக, கடந்த அக்டோபர் 25ம் தேதி சேலம் கனகராஜின் சகோதரர் தனபாலின் உறவினர் ரமேஷ் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர்கள் மீது, சாட்சிகளை கலைத்தல், சாட்சிகளை அழித்தல், தடயங்களை அளித்தல் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, கூடலூர் கிளை சிறையில் உள்ளனர். கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் 2 வது முறையாக கோவையில் விசாரணை நடத்தினர். நேற்று சசிகலாவின் உறவினரான விவேக் ஜெயராமனிடம் தனிப்படை போலீசார் கோவையில் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில், நீதிபதி சஞ்சய் பாபா முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் கனகராஜ், சாஜகான் ஆகியோர் ஆஜராகினர். குற்றம் சாட்டப்பட்டுள்ள 10 பேரில், சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோர் ஆஜராகினர்.

வழக்கு விசாரணைக்கு பின் அரசு வழக்கறிஞர் ஷாஜகான் செய்தியாளர்களிடம் கூறுகையில், வழக்கு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதாகவும், வாளையார் மனோஜ் தற்போது நிபந்தனை ஜாமீனில் தளர்வுகள் அளிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளதாகவும், அதற்கு அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

வழக்கின் தற்போது நிலைமையில் இதுவரை 150 பேரிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாகவும் சாட்சிகளின் விசாரணையில் கொடுத்த வாக்குமூலங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையதால் அதனடிப்படையில் கூடுதல் சாட்சிகளிடையே விசாரணையை நடத்த, நீதிபதியிடம் அரசு தரப்பில் முறையிட்டு கால அவகாசம் கேட்கப்பட்டதால், நீதிபதி இந்த வழக்கினை ஜனவரி 28 க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார் என்றும் கூறினார்.

Updated On: 23 Dec 2021 7:21 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  2. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  3. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்
  4. இந்தியா
    டெல்லியில் வருகிற 21ம் தேதி காவிரி நதி நீர் மேலாண்மை ஆணைய குழு
  5. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  6. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  7. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  8. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  9. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  10. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்