/* */

குளித்தலை அருகே இடிதாக்கி பெண் உயிரிழப்பு

குளித்தலை அருகே வயலுக்கு சென்ற பெண் மீது இடி தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

HIGHLIGHTS

குளித்தலை அருகே இடிதாக்கி பெண் உயிரிழப்பு
X

இடிதாக்கியதில் உயிரிழந்த பெண்.

குளித்தலை அருகே வடக்கு மாடுவிழுந்தான் பாறையை சேர்ந்த பொன்னாம்பலம் என்பவரின் மனைவி வள்ளி (50). இவர் கூலி தொழிலாளி, இவர்களுக்கு முருகன் (34), ரமேஷ் ( 25 ) என்ற 2 மகன்களும் தேவி என்ற 1 மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக குளித்தலை பகுதி முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் அவ்வப்போது சாரல் மழை மற்றும் கனமழை பெய்து வருகின்றது. இந்தநிலையில் கூலி தொழிலாளி வள்ளி நெல் பயிர்களுக்கு களை எடுக்கும் வேலைக்கு சென்று விட்டு மாலை நேரத்தில் ஆடுகளுக்கு இழை பறிக்க வயல் வெளிக்கு நடந்து சென்றுள்ளார்.

அப்போது திடீரென்று பயங்கர சத்தத்துடம் இடி வள்ளியை தாக்கியுள்ளது. இதில் தலை மற்றும் உடலில் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, தெற்கு நங்கவரம் கிராம நிர்வாக அலுவலர் ராஜலிங்கம் அளித்த புகாரின் பேரில் குளித்தலை காவல் நிலையப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 2 Nov 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மிதுன ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. லைஃப்ஸ்டைல்
    சிவபெருமான் பற்றிய மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழைப்பழ தோலில் இவ்ளோ நன்மைகளா..? தோலை இனிமே வீசமாட்டோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    ஒன்றாக இருப்பதன் சக்தி: திருமணம் பற்றிய மேற்கோள்கள்
  5. தொழில்நுட்பம்
    அமேசானின் கோடை விருந்து: மே 2ல் மாபெரும் சலுகை!
  6. வீடியோ
    குஜராத்தில் பிடிபட்ட போதை பொருள் | H Raja பரப்பரப்பு பேட்டி |#hraja...
  7. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...
  8. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. நாமக்கல்
    திருச்செங்கோடு நகராட்சி குப்பைக்கிடங்கில் தீ விபத்து: மாவட்ட ஆட்சியர்...
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...