/* */

மாநகராட்சி துணை மேயர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை

கரூர் மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன் வீட்டில் சோதனை தொடங்கியது. தாக்குதலில் ஈடுபட்டதாக திமுகவினர் 8 பேர் கைது

HIGHLIGHTS

மாநகராட்சி துணை மேயர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை
X

கரூர் மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன் வீட்டில் சோதனை தொடங்கியது

கரூர் மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன் வீட்டில் சோதனை தொடங்கியது. கரூரில் மூன்றாவது நாளாக வருமான வரித்துறை சோதனை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் தற்போது கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூர் பகுதியில் அமைந்துள்ள துணை மேயர் தாரணி சரவணன் வீட்டில் இரண்டு வாகனங்களில் வந்த எட்டுக்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை துவக்கி உள்ளனர்.

முதல் நாள் சோதனை மேற்கொள்ள வந்த போது திமுக தொண்டர்கள் வழிமறித்து சோதனை செய்யவிடாமல் தடுத்தும் மற்றும் இரவில் சீல் வைத்த போதும் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இரண்டு நாட்கள் சோதனை நடைபெறாத நிலையில் இன்று சோதனையை துவங்கிள்ளனர். தாரணி சரவணன் நிதி நிறுவனம் மற்றும் இரு சக்கர வாகனம் விற்பனை உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வருமான வரித்துறையினரை தாக்கியதான புகாரில் 8 பேர் கைது

கடந்த 26ம் தேதி கரூர், ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் வீட்டிற்கு வருமான வரித்துறையினர் சோதனைக்கு வந்தனர். சோதனை நடைபெற்றுக் கொண்டிருந்த போது இப்பகுதியில் திமுகவினர் நூற்றுக் கணக்கானோர் திரண்டனர். சோதனைக்கு வந்த அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் தள்ளு, முள்ளும் ஏற்பட்டது. அப்போது, அதிகாரிகள் சோதனைக்கு வந்த கார் கண்ணாடியை உடைததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து இரு தரப்பினரும் மாறி, மாறி புகார் அளித்துள்ளனர். இரு தரப்பினரும் மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் வருமான வரித்துறையினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இன்று திமுகவினர் 6 பேரை கரூர் மாநகர போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ராயனூர் பகுதியில் கொங்கு மெஸ் சுப்பிரமணி வீட்டில் சோதனையிட வந்த போது அதிகாரிகளை தடுத்த வழக்கில் 2 நபர்களை தாந்தோணி மலை காவல் நிலைய போலீசார் கைது செய்தனர் மொத்தம் 8 பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் இது தொடர்பாக பலரும் கைது செய்யப்படலாம் என போலீசார் தெரிவிக்கின்றனர்.

Updated On: 28 May 2023 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!