/* */

3 வது மாடியிலிருந்து குதித்து நோயாளி தற்கொலை

கரூரில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நபர் மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

3 வது மாடியிலிருந்து குதித்து நோயாளி தற்கொலை
X

கரூர் நீலிமேடு பகுதியை சேர்ந்தவர் சரவணன், கரூரில் டாஸ்மாக் பார் நடத்தி வந்தார். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சரவணனுக்கு பக்கவாதம் ஏற்பட்டு ஒரு கை, கால் செயல் இழந்துள்ளது.

இதையடுத்து அவர் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப் பட்டிருந்தார். மூன்றாவது மாடியில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரது உடல் உடற்கூறு ஆய்வுக்காக பரிசோதனை அறையில் வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை சரவணனின் உறவினர்கள், சரவணனை தேடியபோது மருத்துவமனையில் சிகிச்சையில் இல்லை. அப்போதுதான் அவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நபர் எவ்வாறு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து உறவினர்கள் சந்தேகத்தை எழுப்புகின்றனர். இதுகுறித்து பசுபதிபாளையம் காவல் நிலையப் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Updated On: 28 Feb 2021 7:34 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...