/* */

குமரி அருகே ஊருக்குள் புகுந்த கடல்நீர் - மணல் மூட்டை அடுக்கி வீடுகளை பாதுகாத்த மக்கள்

கன்னியாகுமரி அருகே, ஊருக்குள் புகுந்த கடல் நீரால் அவதியுற்ற பொதுமக்கள், மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து, வீடுகளை பாதுகாத்தனர்.

HIGHLIGHTS

குமரி அருகே ஊருக்குள் புகுந்த கடல்நீர் - மணல் மூட்டை அடுக்கி வீடுகளை பாதுகாத்த மக்கள்
X

குமரி மாவட்டம் அழிக்கால் கடலோர கிராமத்தில், சீற்றம் காரணமாக ஊருக்குள் புகுந்த கடல் நீர்.

கன்னியாகுமரி மாவட்டம் அழிக்கால் கடலோர கிராமத்தில் இன்று திடீரென கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால், கடல் நீர் ஊருக்குள் புகுந்தது. ஆண்டுதோறும் ஜூன், ஜூலை மாதங்களில் இத்தகைய சம்பவம் தொடரும் நிலையில், இன்று ஏற்பட்ட கடல் சீற்றததால், 15 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

கடல் நீருடன் மணலும் வருவதால் வீடுகளில் மணல் தேங்கி அதை அப்புறப்படுத்த மக்கள் பெரு சிரமம் அடைந்தனர். வீடுகளில் தண்ணீர் வராமல் இருப்பதற்காக, தங்கள் வீட்டு வாசலில் மணல் மூடைகளை அடுக்கி வைத்து பாதுகாத்துக் கொண்டனர்.

இனி வரும் நாட்களிலும் கடல் சீற்றம் தொடரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், வீடுகளில் தங்கவும் முடியாமல் பொருட்களை எடுத்து செல்ல மனமின்றி, மக்கள் பரிதவித்து வருகின்றனர்.

Updated On: 29 Jun 2021 12:59 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  2. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  3. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  4. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  6. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  7. திருப்பரங்குன்றம்
    கூடலகப் பெருமாள் கோயில், வைகாசிப் பெருந் திருவிழா!
  8. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  9. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  10. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...