/* */

7 கிராமங்களில் மின்சாரம் துண்டிப்பு - இருளில் தவிக்கும் பொதுமக்கள்

குமரியில் மழை நீர் வடியாததால் 7 கிராமங்களை சேர்ந்த மக்கள், மின்சாரம் இல்லாமல் இருளில் தவித்து வருகின்றனர்.

HIGHLIGHTS

7 கிராமங்களில் மின்சாரம் துண்டிப்பு - இருளில் தவிக்கும் பொதுமக்கள்
X

கோப்பு படம்

கடந்த இரு தினங்களுக்கு முன்பு 72 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மிக கனமழையின் காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் வரலாறு காணாத பாதிப்பை சந்தித்து உள்ளது. மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளிலும் தொடர்ந்த கனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அனைத்து அணைகளும் முழு கொள்ளளவை எட்டியதால் அணைகளில் இருந்து வினாடிக்கு 47 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது.

இந்நிலையில், மழை நின்று 48 மணி நேரம் கடந்தாலும் அணைகளில் இருந்து தற்போதும் வினாடிக்கு 8000 கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுவதால், தாழ்வான பகுதிகளான முஞ்சிறை, பருத்திகடவு உட்பட 7 கிராமங்களை முற்றிலுமாக வெள்ளம் சூழ்ந்துள்ளது.

மேலும் கிராமங்களில் உள்ள மின்மாற்றிகள் மின்கம்பங்களை மழைநீர் சூழ்ந்து இருப்பதன் காரணமாகவும், பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்து மின்கம்பங்கள் மீது விழுந்து இருப்பதாலும் இன்று 6 ஆவது நாளாக மின்சார விநியோகம் தடைபட்டு உள்ளது. இதன் காரணமாக சுமார் 600 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இருளில் தத்தளித்து வருகின்றனர்.

Updated On: 17 Nov 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    4ம் கட்டமாக 96 நாடாளுமன்ற தொகுதி, ஆந்திர சட்டசபைக்கு நாளை தேர்தல்
  2. கல்வி
    கல்லூரி சேர்க்கையில் வெளிமாநில மாணவர்களால் பாதிப்பா?
  3. நாமக்கல்
    நீர்நிலைகளை மறைத்து சிப்காட்: தடுப்பு அணையில் நின்று விவசாயிகள்...
  4. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. லைஃப்ஸ்டைல்
    மனம் விட்டுப் பேசு... மனமே லேசு!
  8. லைஃப்ஸ்டைல்
    உங்கள் மனைவியுடன் சண்டையிட்ட பிறகு சமாதானம் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    அன்னையை போற்றுவோம்..! நேர்காணும் கடவுள்..!
  10. கல்வி
    ஆன்லைனில் கல்லூரி சேர்க்கை: மாணவர்களுக்கான விழிப்புணர்வு