/* */

வயதான தம்பதியின் வீடு இடிப்பு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கன்னியாகுமரியில் வயதான தம்பதியின் வீட்டை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

HIGHLIGHTS

வயதான தம்பதியின் வீடு இடிப்பு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
X

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை பகுதியை சேர்ந்தவர் தங்கையன். 72 வயது முதியவரான இவர் தனது மனைவியுடன் தனக்கு சொந்தமான வீட்டில் சிறிய வீட்டில் குடியிருந்து வந்தார்.

இதனிடையே இவரது வீட்டை பக்கத்து வீட்டை சேர்ந்த சிலர் அபகரிக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது, இந்நிலையில் தங்கையன் கண் அறுவை சிகிச்சைக்காக கேரளா சென்று விட்டு திரும்பிய போது தங்கையன் குடியிருந்த வீட்டை மர்ம நபர்கள் இடித்து தரைமட்டமாக்கி இருப்பது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து தனது மனைவியுடன் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த தங்கையன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

அதில் தான் குடியிருந்த வீட்டை இடித்து தரைமட்டம் ஆக்கிய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கூறி இருந்தார், மேலும் வீட்டை தரைமட்டம் ஆக்கியதுடன் தனது மனைவியின் 5 பவுன் தங்க நகை, சான்றிதழ்கள், வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் காணாமல் போனதால் தற்போது நடுத்தெருவில் நிற்பதாக கண்ணீர் மல்க கோரிக்கை மனு அளித்தார்.

Updated On: 7 July 2021 2:02 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    பணிநீக்கம் செய்யப்பட்ட அமெரிக்க H-1B விசா வைத்திருப்பவர்களுக்கான புதிய...
  2. லைஃப்ஸ்டைல்
    பிறை காணும் பெருநாளுக்கு வாழ்த்துச் சொல்வோமா..?
  3. வணிகம்
    இந்திய மசாலாப் பொருட்களின் மீது உணவுப் பாதுகாப்பு அமைப்பின் புதிய...
  4. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  5. கோவை மாநகர்
    வேளாண் பல்கலைக் கழகத்தில் உலக தாவர நல தின நாள் கொண்டாட்டம்!
  6. தொண்டாமுத்தூர்
    ரூ. 2 லட்சம் மதிப்புள்ள உயர் ரக போதை பொருள் பறிமுதல்: 3 பெண்கள் உள்பட...
  7. இந்தியா
    சிஏஏ திட்டதின் கீழ் முதல் முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ்
  8. காஞ்சிபுரம்
    பிறந்த 3 மணி நேரத்திற்குள் சாலையில் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை
  9. அரசியல்
    ஐஎன்டிஐஏ ஆட்சிக்கு வந்தால் வெளியில் இருந்து ஆதரவு: மம்தா அறிவிப்பு
  10. காஞ்சிபுரம்
    அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு